சம்பாதிக்கும் பணத்தை ப்ளான் பண்ணி செலவு பண்ணுவது எப்படி?

சம்பாதிக்கும் பணத்தை ப்ளான் பண்ணி செலவு பண்ணுவது எப்படி?


‘பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்’ என்பார்கள். இன்றைய வர்த்தக உலகில் பிரதானம், மூலதனம் எல்லாமே பணம்தான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணத்தை நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு எளிதில் சிக்கனமாக பயன்படுத்தலாம் என்பதற்கான வழிமுறைகள் அறிந்தாலே தேவையில்லாத செலவுகள் தானாகவே குறைந்துவிடும்.

செலவு செய்வதற்கு முன் நம் மாத சம்பளம் எவ்வளவு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதே போல் நம் மாத சம்பளத்தில் எவ்வளவு பணத்தை எங்கே எதிலே செலவு செய்கிறோம் என்பதிலும் கவனமாக இருப்பது அவசியம். அது நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவாக இருந்தாலும் சரி, உடுத்தும் உடையாக இருந்தாலும் சரி.

நம் கையில் வரும் வருவாயை குறித்து வைத்துக் கொள்ள பழகுங்கள். இதற்கு ஸ்ப்ரட் ஷீட் போன்றவற்றை உபயோகிப்பது இன்னும் சிறந்தது. வருவாயை போலவே செலவினங்களையும் எழுத மறக்காதீர்கள். ஏன்? எதற்கு? எவ்வளவு? போன்ற கேள்விகளுக்கு பதிலாக உங்கள் செலவினங்கள் அமையும் படி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது.

ஒரு மாதத்திற்கு உங்கள் வருவாயிலிருந்து செலவினங்களை கழித்து பாருங்கள். வருவாய் அளவை விட செலவு அதன் எல்லைக் கோட்டை நெருங்கினாலோ அல்லது தாண்டினாலோ உங்களது சேமிக்கும் பழக்கம் அபாயகரமான கட்டத்தில் உள்ளது என்பதே உண்மை.

ஒவ்வொரு மாதமும் உங்களது க்ரெடிட் கார்டு வரம்பு தாண்டுகிறதா? பேமெண்ட்க்கான பணம் இல்லாமல் போராட்டமாக இருக்கிறதா? இதற்கெல்லாம் உங்களது விடை ‘ஆம்’ என்றால், நீங்கள் உங்கள் வருவாயை விட அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பதே அர்த்தம்.

தேவையில்லாமல் பொருட்களை வாங்கி குவிப்பதை விடுத்து, தேவை அறிந்து செலவு செய்ய முயற்சியுங்கள்.  நிச்சயம் சேமிப்பு தானாகவே கைகூடும்.